கௌரி நாயக் கிணறுகளை மட்டும் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:33 AM | Best Blogger Tips

 No photo description available.

ஒற்றை மனிதராக… தன் கைகளால்… தடுக்க முடியாத சக்தியாக — 60 அடி ஆழமுள்ள இரண்டு கிணறுகளைத் தனியாகத் தோண்டிய பெண்! 
 
கர்நாடகாவின் ஒரு அமைதியான கிராமத்தில்… அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்த ஒரு அதிசயமான துணிச்சல் காட்சி.
 
53 வயதான ஒரு பெண், வியர்வையும் தூசியும் படிந்த நிலையில்… கையில் பிக்காக்ஸ் பிடித்து… 
வறண்டு கடினமான மண்ணை தினமும் அடித்து உடைத்து…
 
அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல்!
அவளின் பெயர் கௌரி நாயக்.
 
இன்று ஊரார் அவளை மரியாதையுடன் “லேடி பகீரதா” என்று அழைக்கிறார்கள்.
 
திடமான தீர்மானத்துடன் இயற்கையையே சவால் செய்யும் மனிதர்களுக்கே அந்த பெயர் உரியது.
 
அவளின் செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடத் தொடங்கியபோது… அருகில் எந்த நீர்மூலமும் இல்லாதபோது…
 
கௌரி காத்திருக்கவில்லை.
 
“யோசிப்பது போதாது… செய்ய வேண்டும்!” என்று அவள் முடிவு செய்தாள்.
 
இயந்திரங்களை நம்பவில்லை… அரசு உதவிக்காக காத்திருக்கவில்லை…
 
யாராவது வந்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை…
 
அவளே தோண்டத் தொடங்கினாள்.
 
அதுவும் ஒரு கிணறு மட்டும் அல்ல…
 
இரண்டு கிணறுகள்!
 
ஒவ்வொன்றும் சுமார் 60 அடி ஆழம்…
 
அதையும் முழுவதுமாகத் தனி முயற்சியால்.
ஆறு மாதங்கள் முழுவதும்… தினமும் சுமார் 6 மணி நேரம் அவள் உழைத்தாள்.
 
பலருக்கு நம்பிக்கை இல்லை… சிலர் கிண்டல் செய்தார்கள்…
 
ஆனால் கௌரிக்கிருந்த ஒரே இலக்கு:
 
தன் மண்ணுக்கு தண்ணீரை மீண்டும் கொண்டு வர வேண்டும்… தன் செடிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். 
 
இன்று அந்த இரண்டு கிணறுகளும் தண்ணீரால் நிரம்பி நிற்கின்றன.
 
அவை வெறும் கிணறுகள் அல்ல…
 
அவை வலிமை, பொறுமை, திடமான மன உறுதி ஆகியவற்றின் உயிருடன் இருக்கும் சான்றுகள்.
அவை அவளின் வயல்களுக்கு மட்டுமல்ல…
 
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கின்றன. 🇮🇳
 
கௌரி நாயக் கிணறுகளை மட்டும் தோண்டவில்லை…
 
கல், மண் ஆகியவற்றிலிருந்து நம்பிக்கையையே தோண்டி எடுத்தாள்.
 
திடமான மன உறுதி இருந்தால்…
 
மிகக் கடினமான மண்ணும் வழிவிடும் என்பதை அவளின் கதை நிரூபிக்கிறது.
 
ஒரு உறுதியான ஆத்மா என்னெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டிய இந்த உண்மையான நாயகிக்கு சல்யூட்! 💖🔥

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

வாழ்வில் நாம் செய்யக் கூடியாவைகள் கூடாதவை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:17 PM | Best Blogger Tips

 


1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது.


 எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. .

10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது.

14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை
நாம் செய்யக் கூடாத செயல்கள் மற்றும் அதன் காரணங்கள் | AstroVed.com
1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.


மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.

இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.

அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌

ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !!

ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.

இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன் 

நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்"

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips

நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்..!! தமிழகத்தில் இருக்கும்  அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை..!! – Tamil News, Online Tamil News,  தமிழ் ...

நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை.

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில்இருக்கும்தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும்பன்னாட்டு நிறுவனங்களின்விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக,ஏமாற்றமுடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ?

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின 
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது

அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்
அந்தஇடைவெளியில்கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது
பின்விளைவுபாதாம் பிஸ்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில்நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவுஅதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
 
உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான். 

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும்,கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன்கைக்குகிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்இன்னும் கொஞ்ச நாட்கள்,சினிமாவிலும்கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள்,நாளை நம்மையும் இழந்து விடுவோம். 

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல 
மருத்துவமனைகள் 
அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

தமிழா..தமிழரின் உணவுகளை,
உண்ண பழகு,நோய் என்பதை,
மறக்க பழகு.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை – What Caught My Eye Site !
வேர்க்கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,தினமும் சாப்பிடுங்கள்.

ஆரோக்கியத்திற்காக.. மட்டும் 🤝💐

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

நேதாஜி – ஹிட்லர்: தைரியமும் தன்னம்பிக்கையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:27 PM | Best Blogger Tips

 File:Subhas Chandra Bose meeting Adolf Hitler.jpg - Wikimedia Commons

🔥 நேதாஜி – ஹிட்லர்: தைரியமும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் 🔥

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்
முதல் முறையாக ஜெர்மனியில் ஹிட்லரை சந்திக்க சென்ற போது…

ஹிட்லரின் பாதுகாவலர்கள்,
நேதாஜியை ஒரு அறையில் தனியாக உட்கார வைத்தார்கள்.
Roar Tamil - இந்திய தேசிய இராணுவத்தின் சரித்திர நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர  போஸ்

“ஹிட்லர் வருகிறார்…”
“ஹிட்லர் இன்னும் சில நிமிடங்களில்…”

என்று சொல்லிக் கொண்டே நேரம் இழுத்தார்கள்.
Subhash Chandra Bose's death anniversary 1945 august 18th filght accident  tiwan The mysterious death that remains unbroken to this day | சுபாஷ்  சந்திர போஷின் நினைவு தினம்; இன்று வரை விலகாமல் ...
அந்த நேரத்தில் நேதாஜி என்ன செய்தார் தெரியுமா?

👉 எந்த பதற்றமும் இல்லாமல்
👉 எந்த அவசரமும் இல்லாமல்
👉 ஒரு புத்தகத்தை எடுத்து
அமைதியாக வாசிக்க ஆரம்பித்துவிட்டார் 📖



😮 ஹிட்லரின் சோதனை

சிறிது நேரம் கழித்து…

ஹிட்லரைப் போலவே வேடமணிந்த ஒருவர்
அந்த அறைக்குள் வந்தார்.

ஆனால்…

👉 நேதாஜி அவரைப் பார்க்கவே இல்லை
👉 தலை கூட தூக்கவில்லை
👉 வாசிப்பதைத் தொடர்ந்தார்

மீண்டும் இன்னொரு “ஹிட்லர்”
மீண்டும் இன்னொரு “ஹிட்லர்”
tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் -  tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்
ஒவ்வொருவரும் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.

ஆனால் நேதாஜி
ஒரு கணமும் கவனம் சிதறவில்லை.

📌 காரணம் என்ன தெரியுமா?

அந்த காலத்தில்,
ஹிட்லரைப் போலவே வேடமணிந்தவர்களை வைத்து
பலரை ஏமாற்றி,

“நான் ஹிட்லரை சந்தித்தேன்”
என்று சொல்ல வைத்த சம்பவங்கள் இருந்தன.
18.8.1945 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள் 📌🥷🏻⚔️⚡ . . . ##nethaji  #nethajideathday #nethajisubashchandrabose👑🔥❤️ #nethajipakthan  #nethajibloods♥️💥 #ɴᴇᴛʜᴀᴊɪ ...


👑 உண்மையான ஹிட்லர் வந்த தருணம்

கடைசியாக…

உண்மையான ஹிட்லர்
மெதுவாக நேதாஜியின் பின்னால் வந்து,

👉 அவரின் தோளில் கை வைத்தார்.

உடனே நேதாஜி தலை தூக்கி,
ஒரே வார்த்தை சொன்னார்:

“ஹிட்லர்.”

😳
ஹிட்லருக்கு ஒரே வியப்பு!
Why did Netaji Subhas Chandra Bose believe that Hitler could be a great  ally?


🤯 ஹிட்லரின் கேள்வி

ஹிட்லர் கேட்டார்:

“நீங்கள் இதற்கு முன் என்னை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.
அப்படியிருக்க,
எப்படி என்னை நீங்கள் சரியாக அடையாளம் கண்டீர்கள்?”


The interpreter tempered Neta Ji's sharp rebuke to make it more acceptable  to Hitler. Netaji Subhas Chandra Bose met Hitler solely for strategic and  political purposes, aiming to secure support against British
🔥 நேதாஜியின் பதில் (வரலாற்றுப் punchline)

நேதாஜி சிரித்துக் கொண்டு சொன்னார்:

“இந்த உலகத்தில்
சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரைத் தவிர
வேறு யாருக்கும் தைரியம் கிடையாது!”

💥💥💥



🇮🇳 இதுதான் நேதாஜி!

👉 அச்சமற்ற தைரியம்
👉 தன்னம்பிக்கையின் உச்சம்
👉 தன்மானத்தின் உயரம்
👉 தலைவருக்கே உரிய கம்பீரம்



❤️ கடைசி வரி

எத்தனை முறை படித்தாலும்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
ஒரு சரித்திர நிகழ்வு இது!

🙏
சூப்பர்

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

பரிசு வழங்கும் பிரகாஷ்
 

 

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை நெகிழ வைத்த மாணவர்கள்..
(ஜனவரி 2020)
👍👍
👍

May be an image of one or more people and people studying  

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கும் இந்தக் கிராமம், மிகவும் பின்தங்கிய கிராமம். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தினமும் கூலி வேலைக்குப் போய் வாழ்க்கையை நகர்த்தும் நிலையில் உள்ளவர்கள். இந்த நிலையில், தங்களின் மகன், மகள்களை படிக்க வைக்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூருக்கு அனுப்பவேண்டிய சூழல். இரண்டு ஊர்களுக்கும் இடையில் மூன்று சிறு வாய்க்கால்கள் ஓடுவதால், தங்கள் பிள்ளைகளை பயந்துகொண்டே பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
 

அந்தப் பேருந்து
இந்த நிலையில்தான், தெற்கு அய்யம்பாளையத்துக்கு வரும் தனியார் பேருந்து ஒன்றின் முதலாளி, கடந்த 10 வருடங்களாக தெற்கு அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை தனது பேருந்தில் காலை, மாலையில் இலவசமாக அழைத்துக்கொண்டு போகவும் வரவும் செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், தெற்கு அய்யம்பாளைய மக்கள் அந்தப் பேருந்தின் முதலாளி பிரகாஷை அழைத்துவந்து பாராட்டு விழா நடத்தியதோடு, அவரை வைத்து மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகளும் வழங்க வைத்தனர். அப்போதுதான், மாணவர்கள் சிலர் பிரகாஷின் கால்களில் விழுந்து வணங்கியதோடு, `நீங்க எங்களை இலவசமாக உங்க பேருந்துல அழைச்சுக்கிட்டு போய் வரலன்னா, எங்களால படிக்க முடியாம போயிருக்கும். உங்களுக்கு நன்றி' என்று கூறி, பிரகாஷையும், கிராம மக்களையும் நெகிழ வைத்திருக்கிறார்கள்.
 பாராட்டு விழாவில் பிரகாஷ்
தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணியிடம் பேசினோம். ``எங்க ஊர் வறட்சியான ஊர். எங்க ஊர்ல இருந்து கடவூருக்குச் சரியான சாலை வசதிகூட கிடையாது. எங்க கிராமத்துப் பிள்ளைகள் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூர் போய் படிக்க வேண்டிய சூழல். தினமும் நடந்துதான் பள்ளிக்குப் போய்வந்தார்கள். அந்த வழியில் மூன்று வாய்க்கால்கள் ஓடுவதால், மழைக்காலங்களில் பயந்துகொண்டேதான் எங்க கிராமத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க அனுப்பி வந்தனர். பல பெற்றோர்கள் அப்படி அனுப்ப பயந்துகொண்டு தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமையும் நடந்தது.
 
இந்தப் பிரச்னையை யதேச்சையாக அறிந்த அந்தப் பேருந்தின் உரிமையாளர் பிரகாஷ், மாணவர்களிடம், `நீங்கள் தினந்தோறும் நடந்துதான் பள்ளிக்குப் போய் வீடு திரும்புகிறீர்களா?'னு கேட்டிருக்கிறார். 
 
மாணவர்களும், `ஆமாம்' என்று பதில் சொல்ல, பிரகாஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மாணவர்கள் இலவசமாக தனது பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிவித்தார். கடகடனு 9 வருடங்கள் ஓடி, பத்தாவது ஆண்டை தொடங்கியிருக்கு, இந்த இலவசப் பேருந்துப் பயணம். அவரின் இந்தச் சேவையால் பல பிள்ளைகளின் கல்வி தடையில்லாமல் தொடருது. 
 
அதற்கு நன்றிக்கடனாதான் அவரை அழைத்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
 
தனியார் பேருந்தின் உரிமையாளரான பிரகாஷிடம் பேசினோம். ``நான் கீழ்நிலையில் இருந்து உழைப்பின் காரணமாக முன்னுக்கு வந்தவன். எனக்குதான் தெரியும், படிப்பு எவ்வளவு முக்கியம்னு. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த ஏழைவீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கணும்னு நினைச்சேன். என்னால அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்னு நினைச்சேன். அப்போதுதான், தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடவூர் வரை நடந்துபோய் படிக்கும் அவலத்தைப் பார்த்தேன்.
 
உடனே, அவர்கள் எனது பேருந்தில் இலவசமா பயணிக்கலாம்னு அறிவிச்சேன். இதை சாதாரணமான உதவியா நினைச்சுதான் செய்தேன். ஆனால், அந்தக் கிராமத்து மக்கள் என்னை அழைத்து பாராட்டு விழா நடத்தி என்னை நெகிழ வைத்துவிட்டார்கள். அதைவிட, அந்த மாணவர்கள் எனது கால்களில் விழுந்து வணங்கி, என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை என் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன்" என்றார்.
 
 
Thanks & Copy from 

Paranji Sankar 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 


  

 


என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

தமிழ் மொழியின் சிறப்புகள் | Specialization of Tamil Language.

என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதுல? - என்று யாராவது கேட்டால் அதற்கு
இது தான் பதில்...!
 என் தமிழ்
இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. கந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !
தமிழ் மொழியின் சிறப்பு | Specialty Of Tamil » New Smart Tamil 
1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!
தமிழ் குலமகள் 
1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!
1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !
1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!
 
May be an image of one or more people 
1.கம்பராமாயணம்-வழிநூல்.
1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!
ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..
1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!
சமய குரவர்கள்
----------------------------
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்: சமயக் குரவர்கள் மற்றும் சந்தானக்  குரவர்கள் துதி 
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்
சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------Saint Thiruvalluvar UPSC
தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்
மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------
அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.
சித்தர்கள்: பதினெண் சித்தர்:
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்
இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.
1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.
பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.
இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய இனிய மொழி எம் தாய்மொழி தமிழ்..!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது.பெருமை கொள்வோம் தமிழரென்று.
தமிழனென்று சொல்லடா..!
தலை நிமிர்ந்து நில்லடா...!!
 
------------------------
 
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.