இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
#தமிழகத்தில் மட்டும் ஏன் கடவுள் எதிர்ப்பு இருக்கிறது?
எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?
கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்
👇👇👇👇👇👇👇
#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு
இந்தத் #தமிழ் மண்தான்,
இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன.
அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.
அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,
கங்கை கொண்ட சோழபுரமும்தான்.
👉 அப்போது
வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது👈
லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.
இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப் பட்டது.
500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது.
அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம்
தங்கம் கிடைத்தது.*
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
எங்கும் மூன்று போகம் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை
தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.
மலேயா காடுகளிலிருந்தும்,
மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து
தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
ஏன் கோவிலை கட்டினார்கள்?
தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் ...
அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை,
கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு
பிரித்து கொடுக்காமல்,
அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது ...
வரி வசூல் என்ன,
அதில் அரசு நடத்த
அதிகாரிகளுக்கு ஆகும் செலவு,
மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு ...
வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன்,
கட்டுமான பணிக்கு
அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள்,
சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள்,
கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர்,
அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து,
வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு,
அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு
அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல்,
அதற்கு ஒரு சமூகம்,
இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம்.
அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை.
அதற்கு ஒரு சமூகம்.
அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம்.
கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை.
மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம்.
அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும்,
கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை.
ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும்,
கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம்,
ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு,
தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.
ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு,
மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
🔥 இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு. 🔥
மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
👇👇👇👇👇👇👇
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன.
இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
👆👆👆👆👆👆👆👆
கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும்,
அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ,
அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக
நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ,
உடை உடுத்தி கொள்வாரோ,
தினமும் உணவு உண்பாரோ,
நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ,
அப்படி
அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக
ஒரு
தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே,
தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது. பைந்தமிழ் நாடு...
👇👇👇👇👇👇👇
இப்பொழுது புரியும் எதற்கு தமிழகத்தில் மட்டுமே
#ஆரிய எதிர்ப்பு என்ற பெயரில்
தமிழக கோவில்களில் இருந்த அனைத்து செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது..
இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே...
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
விமான பயணம் என்பது உடலை கடுமையாக வருத்த கூடியது, புவிஈர்ப்பு விசையினை மீறி நடக்கும் அந்த இயக்கம் கடும் உளைச்சலில் அசதியில் உடலை தள்ளும்
அதனால்தான் ஒரு விமானபயணம் முடிந்தபின் பைலட்டுகளுக்கே ஓய்வு வழங்கபடும் இன்னும் பல கட்டுபாடுகள் உண்டு
ஆனால் 74 வயதில் அம்மனிதனால் இப்படி ஓயாமல் பறக்கமுடிகின்றது, ஓய்வு என்பதே அறியாமல் ஓடி ஓடி உழைக்கமுடிகின்றது என்றால் அதில்தான் இந்த மண்ணின் மேலும் மக்கள்மேலும் அவன் கொண்ட பெரும் அன்பு புரிகின்றது, நாடும் நாட்டு மக்களும் தவிர எதையுமே அம்மானிதன் சிந்திப்பதுமில்லை என்பது தெரிகின்றது
இங்கிருந்து லண்டனுக்கு பலமணிநேர பயணம் பின் மாலதீவு அங்கிருந்து தூத்துகுடி என தொடர்ந்து களைப்பே இன்றி பயணிப்பது மானுடர்க்கு சாத்தியமில்லை , அம்மனிதனிடம் ஏதோ விஷேஷித்த சக்தி குடிகொண்டிருக்கின்றது
அந்த அற்புத திருமகன், கற்பக தருவாய் தமிழகத்துக்கு பல நலதிட்டங்களை தூத்துகுடியில் அறிவித்திருக்கின்றார், தூத்துகுடியின் பாரம்பரிய பெருமைகளை சொல்லி பில்கேட்ஸ்க்கு தான் கொடுத்த தூத்துகுடி முத்துபற்றி சொல்லி,இந்நாட்டின் மிக முக்கியமான பாரம்பரியமான இடம் இந்த தூத்துகுடி கடல் என்பதை உலகறிய சொல்கின்றார்
அப்படியே அந்த மண்ணின் மாவீரர்களை சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து 4,100 கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்திருக்கின்றார்
அதன்பின் இப்போது மாபெரும் இந்து மன்னன், சிவபக்தன் ராஜேந்திர சோழனின் பெருவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்
இது முக்கியமான நேரம், ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியினை பாடியபடி ஒவ்வொருவரும் திருநீறும் ருத்திராட்சமும் வெண்ணாடையுமாக அவனை மோடியுடன் நன்றியுடன் நினைக்க வேண்டிய நேரம்
ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் அங்கீகாரத்தை உலகவாழ் இந்துக்களிடமிருந்து தேசத்தின் மொத்த மக்களுக்கும் பெற்று தருகின்றார் மோடி
அவனின் மாபெரும் சிவபக்திக்கு பெரும் சான்றாக அவன் கொண்டிருந்த பெரும் சிவபக்திக்கு அங்கீகாரமாக ஒவ்வொரு இந்துவிடமும் அவனை கொண்டு செல்கின்றார்
இந்து மன்னர்கள் என்றால் விகரமாதித்தன், சந்திரகுப்தன், சிவாஜி என சொல்லிகொடுத்து பிரிக்கபட்ட வடநாட்டு இந்துக்களிடம் இவன் நம் இந்து மன்னன், நம்மில் ஒருவன் நம் சிவனை வணங்கியவன் என எடுத்து செல்கின்றார்
அப்படியே தமிழன், தமிழ் பெருவீரன், தமிழரின் அடையாளம் என பிரித்து திணிக்கபட்ட அவன் அடையாளத்தை, தேசிய அடையாளமாக ,பாரத மன்னர்களில் ஒருவன், பாரத சிவபக்த மன்னர்களில் ஒருவன் என அவனை தேசியத்துக்குள் சரியாக பொருத்துகின்றார்
இன்னொரு விஷயம் முக்கியமானது, அது உலக அரசியல்
மேற்கே அரபிகடல் பக்கம் அந்நிய சதியெல்லாம் இந்தியா முடக்கியிருக்கின்றது ஈரான் முதல் இந்தியாவின் பம்பாய் கோவா லட்சதீவு மாலதீவு அது தொடங்கி ஆப்ரிக்கா என எல்லா பக்கமும் இந்திய கப்பல் தளமும் பாதுகாப்புகளும் சரியாக பின்னபட்டிருக்கின்றன
இந்த மேற்கத்திய கடல் காவலுக்கு வீரசிவாஜி பெயரில் கப்பல்படை நகர்வுகள் செய்யபடுகின்றன, பாகிஸ்தான் இன்று இந்திய கடல் முற்றுகைக்குள்தான் இருக்கின்றது
அதுபோக மிகபெரிய எதிரியான சீனாவின் முத்துமாலை திட்டம் என இந்தியாவினை சுற்றி அது கட்டிய கடல் சதி வலையின் மேற்கு பக்கம் வெட்டியாயிற்று
ஆனால் கிழக்கே நிலமை இன்னும் சரியாகவில்லை, வங்கதேசம் பர்மா தாய்லாந்தின் சில பக்கம் என சீனாவின் மிரட்டல் அதிகம்
இதனால் கிழக்கு கடற்கரையில் கவனம் செலுத்துகின்றது மோடி அரசு, மிக பிரமாண்டமான காரியங்களை அது செய்கின்றது
சுமார் 50 கப்பல்கள், கணக்கற்ற நீர்மூழ்கிகள், பிரத்யோக கடல் கலன்கள் என கிழக்கு கடலை கட்டுபடுத்தும் இந்தியாவின் திட்டம் மிக பெரிது
ஏற்கனவே கோவாவில் ஒரு கடற்படை தளத்துக்கு ராஜேந்திரசோழன் பெயர் உண்டு என்றாலும் இந்த கிழக்காசிய கடல்சார் பாதுகாப்புக்கு அவன் காட்டிய வழியில்தான் கடற்படை நகர்கின்றது, அவன் காட்டிய வழியில்தான் ஆயிரம் வருடம் கடந்து இந்தியா நகர முடிகின்றது என்பதால் அவனை முன்மாதிரியாக கொண்டே சீனாவுக்கு எதிராக வியூகம் வகுக்கின்றார்கள்
அக்கால சீனா எந்த நாட்டையும் கடற்படையால் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் பவுத்தம் சம்பந்தமான மிரட்டல்கள் அவர்களிடமிருந்தும் பல வகையில் வந்தன, அவற்றை தன் பலமான கப்பல்படையால் முறியடித்து வணிகமும் மதமும் நாடும் காத்தான் சோழன்
இன்று அவன் செய்த அதே காரிய தேவைபடுவதால் அவன் வகுத்த வழியிலே தேசம் பயணிக்கின்றது, மோடி இங்கு வந்து அந்த சோழன் வணங்கிய சிவனுக்கு அபிஷேகம் செய்வது பெரும் கடல்பாய்ச்சலுக்கு முந்தைய வழிபாடு
அந்தமான் வழியாக வரும் சீன மிரட்டல் , தாய்லாந்தை ஊடறுத்து அது கட்ட நினைக்கும் கால்வாய், பர்மா வங்கதேசம் வழியாக அது இடும் மிரட்டலை எல்லாம் வெட்டிபோட மாபெரும் கடல் பாதுகாப்பை கட்டுகின்றது மோடி அரசு
இந்த பிரமாண்ட கடல்திட்டத்துக்கு ராஜேந்திர்சோழன் பெயரை இடும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டு
ராஜேந்திர சோழனை இத்தேசம் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை, அவன் தமிழ்பேசிய இந்து இந்நாட்டின் பெரும் அடையாளம் இத்தேசத்தின் கவுரவம் இத்தேசத்தின் மிக முக்கிய பாரம்பரியம் என்றே கருதுகின்றது
அதனால் எந்த கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவிலில் வழிபட்டு கிழக்காசியா முழுக்க ராஜேந்திர சோழன் கட்டுபடுத்தினானோ அதே வழியில் அதே சிவனை வணங்கி அவன் பெயரில் பெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார் மோடி
அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனிடம் தேசத்துக்காக கேட்கும் வரத்தை நாமும் கேட்போம்
சோழி எனும் சொல்லுக்கு காவல் என பொருள், அந்த சோழர்கள் மதமும் மண்ணும் காப்பவர்களாக இருந்தார்கள், அந்த வரத்தைத்தான் கங்கை கொண்ட சோழீஸ்வரர் அவர்களுக்கு கொடுத்தார்
சோழம் சோழம் என அவர்கள் முழங்கியதில் சிவனை நோக்கி வரம்கேட்ட பக்திதான் இருந்தது
சோழம் சோழம் என முழங்கிய அந்த கோவில் முன் நாமும் தேசம் தேசம் என முழங்கி இந்நாட்டுக்க்கான வரத்தை கேட்போம், தென்னாட்டை தன்நாடாக கொண்ட அந்த சிவன் இத்தேசத்துக்கு எல்லா காவலையும் பெரும் வரத்தையும் அருளட்டும்
எக்காலமும் இங்கு மதமும் மண்ணும் காக்கும் பெரும் வரத்தை ராஜேந்திர சோழனுக்கு கொடுத்தது போல மோடிக்கும் அந்த பெரும் வரத்தை சிவன் வழங்கட்டும்